Saturday, April 22, 2017

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா அனைத்து ஒன்றியத்திலும் நடத்தப்படும் தஞ்சை கலந்துரையாடலில் தீர்மானம்

தஞ்சை, ஏப். 22 9.4.2017 அன்று காலை 10.30 மணியள வில் தஞ்சை கீழவீதி பெரியார் இல்லத்தில், மாவட்ட பகுத்தறி வாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ப.க.தலைவர் ந.காமராசு தலைமை வகித்து உரையாற்றும்போது மார்ச் 5இல் மாநில கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்கள் குறித்தும், ஏப்ரல் 29 புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவை நடத்துதல் குறித்தும் உரையாற்றினார். மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல் அனைவரை யும் வரவேற்று பேசும்போது 2017 பிப்ரவரி 12இல் தஞ்சை யில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கத் தின் வரவு - செலவுகளை ஒப் படைத்து பேசினார். தொடர்ந்து மாநில ப.க. தலைவர் முனை வர் வா.நேரு பேசும்போது:_ பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் தஞ்சையில் எப்போதும் சிறப்பாகவே இருக் கும். நான் தஞ்சை வரும்போது உற்சாகம் பெறுகிறேன். கார ணம் இயக்கச் செயல்பாடுகள் தான். பொதுச்செயலாளர் மா.அழகிரிசாமி அவர்களின் தொடர்புகளால் மேலும் அமைப்பு வலிமை பெற் றுள்ளது என்றும், அதிக உறுப் பினர்களை, அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்த நாடு இரா.குணசேகரன், மண் டல செயலாளர் மு.அய்யனார், பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், மாவட்ட துணை செயலாளர் ச.சந்துரு, மாவட்ட ப.க. துணை தலைவர் பி.ஆர்.வீரமணி, மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் ந.சங்கரன், ஒரத்தநாடு ஒன்றிய ப.க.தலைவர் கு.நேரு, மாவட்ட ப.க.அமைப்பாளர் ச.அழகிரி, மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகர தலை வர் பா.நரேந்திரன், விடுதலை வாசகர் வட்ட மாநகர செய லாளர் மீ.அழகர்சாமி, மாநகர ப.க. செயலாளர் மா.இலக்கு மணசாமி, ஆசிரியர் மலர் மன்னன், மாவட்ட வழக்குரை ஞர்அணி தலைவர் இரா.சரவணகுமார், மாவட்ட ப.க. துணை செயலாளர் பொ.இராஜூ, மாநகர செயலாளர் சு.முருகேசன், ஒன்றிய மாண வரணி தலைவர் ச.திராவிட மணி, மாநகர மகளிரணி தலை வர் த.வள்ளியம்மை, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் சி.இரமேசு ஆகியோர் உரைக்குப்பின்னர் ப.க. பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி உரையாற்றும் போது: திராவிடர் கழகத்திற்கு வேராக இருப்பது பகுத்தறிவாளர் கழகம். ஏன் என்றால் திராவிடர் கழகம் வலிமையாக இருந்தால் சமூகநீதியும், பகுத்தறிவுப் பணியும் சிறப்பாக இருக்கும். அதற்கு நாம் அரசுத்துறையிலும், தனியார் நிறுவனத்திலும் பணியாற்றும் தோழர்களிடம் நம் பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும். இயக்க இதழ்களுக்கு அதிக சந்தாக் களைச் சேர்த்துத் தரவேண்டும். அதிக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று கூறினார். ப.க. மாவட்ட தலைவர் ந.காமராசு கூட்டத்தில் எடுக்கப் பட்டத் தீர்மானங்களை வாசித் தார்.
தீர்மானம் 1: 5.3.2017 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில கலந்துரையாடல் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு அதனை செயல்படுத் துவது என முடிவு செய்யப் படுகிறது.
தீர்மானம் 2: புரட்சிக் கவி ஞர்  பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் விழாவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பில் அனைத்து ஒன்றியத்திலும் நடத்துவது எனவும் வரும் 29.4.2-017 அன்று தஞ்சையில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 3: பள்ளி கல்லூரி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிறப்பாக வெளிவரும் மாத இதழ்கள் பெரியார் பிஞ்சு, தி மார்டன் ரேசனலிஸ்ட் ஆகிய இதழ் களுக்கு சந்தாக்கள் சேர்ப்பது எனவும், 2017 சூன் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி யாக சென்று ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 4: மூன்று மாதத் திற்கு ஒரு முறை அவசியமாக மாவட்ட, ஒன்றியப் பொறுப் பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 5: பிப்ரவரி 12இல் தஞ்சையில் நடைபெற்ற புதியக்கல்விக் கொள்கை, நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கத்தின் வரவு - செலவு சரி பார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நன்றி : விடுதலை 22.04.2017