Friday, May 05, 2017

திருமங்கலத்தில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் விழா, புதிய கல்விக் கொள்கை நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம்

திருமங்கலம், மே 5- உசிலம் பட்டி கழக மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் விழா, புதிய கல்விக் கொள்கை நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் திருமங்கலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

உசிலம்பட்டி கழக மாவட்ட ப.க. சார்பில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா புதிய கல்விக்கொள்கை நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து கருத்தரங்கம் 26.4.2017 மாலை 6 மணியளவில் திருமங்கலத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது.

இந்த விழாவில் மாவட்ட ப.க.செயலாளர் ஆசிரியர் ஜெ. சுப்பிரமணியன் அனைவரை யும் வரவேற்றார். மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர் மன் னன் தலைமை வகித்து உரை யாற்றினார். தொடக்கத்தில் மதுரை மாநகர் மாவட்ட ப.க. தலைவர் முருகானந்தம். மேலூர் மாவட்ட ப.க. தலைவர் பால் ராசு, மாநில ப.க. துணைத் தலைவர் குருசாமி, உசிலம் பட்டி மாவட்டத் தலைவர் சிவா, மதுரை மண்டலச் செய லாளர் மா.பவுன்ராசா, அமைப் புச் செயலாளர் செல்வம், மாநில ப.க. தலைவர் வா.நேரு ஆகியோர் உரைக்கு பின்பு புதிய கல்விக்கொள்கை, நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து தமிழக அரசு, எதிர்கட்சி மற் றும் அனைத்துக்கட்சி எதிர்ப்பை மீறி மத்திய மோடி அரசு நீட் தேர்வை திணிக்க பார்க்கிறது என பல்வேறு கருத்துகளை சிறப்பான முறையில் விளக்கி உரையாற்றினார் மாநில ப.க. செயலாளர் மா.அழகிரிசாமி அவர்கள்.

நிறைவாக புரட்சி கவிஞர் ஒரு சிறந்த நாத்திக கவிஞர், தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை கவிதை வடி வில் வடித்து புரட்சி செய்தவர் கிராமங்கள் தோறும் புரட்சி கவிஞர் அவர்களின் தத்துவங் களை எடுத்து செல்ல வேண் டும் என சிறப்புரையாற்றினார் புலவர் அரவரசன் அவர்கள். நிறைவாக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் பா. செங்கதிர் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண் டவர்கள் பொதுக்குழு உறுப்பி னர்கள் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் தனபாலன், மாநகர வட்ட ப.க. செயலாளர் பெரி.காளியப்பன், கவிஞர் பி.வேல்முருகன், கவிஞர் பன கல் பொன்னையா, த.மாயி, மகேஷ், முத்தையா, இராம சாமி, ஆட்டோ செல்வம், கனி, தொப்பி முருகேசன், சி. பிரபாகரன், இரா.பிரபாகரன், முத்துநாகு, ஆசிரியர் சுப்பிர மணியன், செங்கதில் ஏற்பாட் டில் 50க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அரசு ஊழியர்கள் பங் கேற்றார்கள்

நன்றி : விடுதலை 05.05.2017